வன சார்நிலை பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பதவிக்கான ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு வன சார்நிலை பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர்(குரூப் 6) பதவியில் காலியாக உள்ள 10 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி முதல் 9ம் தேதி, 11ம் தேதி மற்றும் 27ம் தேதிகளில் நடத்தியது. இத்தேர்வை 2854 பேர் எழுதினர். தேர்வர்கள் எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்விற்கு 30 பேர் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நேர்முக தேர்வு வரும் 29ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்: இன்றிரவு விஸ்வசேனாதிபதி வீதியுலா

தமிழக அரசில் 51 வக்கீல் பணியிடங்கள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை