வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார், தன்னார்வலர்கள், ெபாதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது. இதையடுத்து மேல்மலை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல 10 நாட்களுக்கு பிறகு நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காட்டுத்தீ கட்டுக்குள் வந்த பகுதியில் மின்பணியாளர்கள், மின்பாதை சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.