இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா, பிரசன்னா பாலச்சந்திர வரலே அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது,’ வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது மிக முக்கியமானது. இதை மறுக்கும் கல்லூரிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். நமது நாட்டில் எம்பிபிஎஸ் படித்த மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை மருத்துவக் கல்லூரிகள் வித்தியாசமாக நடத்த முடியாது. வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை இந்திய கல்வி நிறுவனங்களில் எம்பிபிஎஸ் படித்தவர்களுக்கு இணையாக நடத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.