சென்னை: வெளிநாட்டில் பணியின்போது இறந்த தமிழர்களில் குறைந்த வருவாய் பிரிவை சேர்ந்த குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறைந்த வருவாய் உள்ள குடும்பத்தில் மகன், மகள் திருமணத்துக்கு ரூ.20ஆயிரம் உதவித் தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். கல்வி உதவித் தொகையாக ரூ.12ஆயிரம் வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.