இது ரேஷனில் வழங்கப்படும் உணவு தானியங்களை நம்பி உள்ள ஏழை, நடுத்தர குடும்பங்களை பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போல், நடப்பு நிதியாண்டில் 1.89 லட்சம் கோடி ரூபாயாக இருந்த உர மானியம் அடுத்த நிதியாண்டில் 1.64 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. உர மானியம் ரூ.25 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால், உரம் விலை அதிரிக்கும் அபாயம் உள்ளதால், விவசாய விளை பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.