நேற்றிரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். சிவராஜனுடன் அவரது தாயும் வசித்து வருகிறார். இன்று காலையில் நீண்ட நேரமாகியும் சிவராஜன் உள்பட 4 பேரும் எழும்பவில்லை. தனி அறையில் படுத்திருந்த தாய் கதவை தட்டினார். அர்ஜுன் மட்டும் அரைகுறை மயக்கத்துடன் கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது, ‘4 பேரும் இரவில் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டோம்’ என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, அர்ஜுனே, விழிஞ்ஞம் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து விவரத்தை கூறி உள்ளார். உடனே போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவராஜனும், அபிராமியும் பரிதாபமாக உயிரிழந்தனர். அர்ஜுன், பிந்து ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.