மதுரை: வெளிநாடு மருத்துவ பட்டதாரி தேர்வுகளுக்கான FMGE தேர்வு நடத்த தடை விதிக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கேசவன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், FMGE தேர்வுக்கு மறுமதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க இயலாது என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமதிப்பீடு, மறுகூட்டல் தொடர்பான அறிவிப்பை நீக்கி புதிய உத்தரவு வெளியிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசின் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்தது.