சென்னை: குன்றத்தூர் வட்டம் நடுவீரப்பட்டில் நள்ளிரவில் ஏரி உடைப்பால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. நீர்வளத்துறைக்கு சொந்தமான 200 ஏக்கர் பரப்பளவுள்ள மிகப்பெரிய ஏரி உடைந்தது. குடியிருப்புகளை ஏரி நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏரியின் கரை உடைப்பால் வயல்வெளி வழியாக தண்ணீர் பாய்ந்து குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.