கொடைக்கானலில் தொடர்மழை: அருவிகளில் வெள்ளப்பெருக்கு


கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக சுமார் 7 செமீ மழை பதிவாகியது. தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, கரடிச்சோலை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அருவிகளில் கொட்டும் மழைநீரை கொடைக்கானல் வந்த சுற்றுலாப்பயணிகள் ரசித்துச் செல்கின்றனர்.

Related posts

பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு!

கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான விதிமுறைகளை மாற்றக்கோரி மைதானத்தின் நடுவில் நாற்கலியில் அமர்ந்து போட்டியை நிறுத்திய பட்டாலியன் எஸ்.பி.

அப்துல் கலாம் நினைவிடத்துக்கு இடம்: அரசாணைக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு