காவிரியில் வெள்ளப்பெருக்கு: பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராட தடை

ஈரோடு: காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி கூடுதுறையில் ஆற்றில் இறங்கி புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையில் பக்தர்கள் கூடுதுறையில் கூடுவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆற்றுக்கு செல்லும் படித்துறைகள், பரிகார மண்டபங்களில் தகரங்கள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் திதி, தர்ப்பணம், பரிகார பூஜைகள் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்துள்ளது. காவிரி ஆற்றில் மின் மோட்டார்களை அமைத்து புனித நீராட ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஊதிய உயர்வு கோரி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஆந்திராவில் இருந்து ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.