பாரத் மண்டபத்திற்குள் புகுந்த வெள்ளம்: காங். விமர்சனம்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஜி20 மாநாடு நடந்த பாரத் மண்டபத்தில் தண்ணீர் தேங்கியது. மழை வெள்ளத்தில் பலர் நடந்து சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படத்தை இணைத்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத் டிவிட்டரில் பதிவிடுகையில், பாஜ அரசின் வெற்று வளர்ச்சி அம்பலமாகியுள்ளது. ஜி-20 மாநாட்டுக்காக ரூ.2,700 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒரே மழையில் அனைத்தும் போய்விட்டது. நாட்டுக்கு எதிரான சர்வதேச சதியின் ஒரு பகுதியாக இந்த மழை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்