சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் முழுவீச்சில் மீட்பு, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 550 வீரர்கள் களமிறங்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 275 வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 275 வீரர்கள் களமிறங்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 97 முகாம்களில் 4192 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.