மேலும், சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தனர். அந்த கிராம மக்களின் இந்த செயலை பாராட்டி ரயில்வே நிர்வாகம் ரூ.15,000 பரிசுத்தொகையை தாதன்குளம் மக்களிடம் வழங்கியது. அரசு தரும் நிதிக்காகவோ, பேருக்காகவோ இந்த உதவி செய்யவில்லை என்று கூறிய கிராம மக்கள் அதனை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தனர். மேலும் ரயில்வே துறை அதிகாரிகளிடம், தாதன்குளத்தில் பாலக்காடு ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், ரயில் நிலையத்தை புதுப்பிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ரயில்வே அதிகாரி ஆவன செய்வதாக உறுதியளித்தனர்.
இந்தநிலையில் ரயில்வே துறை பாராட்டி வழங்கிய ரூ.15,000யை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க கிராம மக்கள் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த தூத்துக்குடி எம்பி கனிமொழியிடம் முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குமாறு ரூ.15,000 ஒப்படைத்தனர். மேலும், ரயில்வே அதிகாரியிடம் தெரிவித்த 2 கோரிக்கையையும் எம்பி கனிமொழியிடம் வலியுறுத்தினர். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது கலெக்டர் லட்சுமிபதி, தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.