மும்பை: மும்பையில் இருந்து தோகாவுக்கு இண்டிகோ விமானம் நேற்று அதிகாலை புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டறியப்பட்டது. 2 முறை புறப்பட முயற்சித்தும் நிபுணர்களால் கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதனால் விமானத்திற்குள்ளேயே உணவு, தண்ணீர் இன்றி பயணிகள் 5 மணி நேரம் தவித்தனர்.
இந்த காட்சிகளை சில பயணிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விரக்தி தெரிவித்தனர். அதன்பிறகு அவர்கள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அடுத்த விமானத்தில் அவர்கள் தோகா அனுப்பப்படுவார்கள் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது.