ஜெய்ப்பூர்: விமானம் மூலம் சென்னை வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு ரயிலில் தப்பிச் செல்லும் ராஜஸ்தான் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். மாதவரம் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலம் பாலி சென்று 2 பேரை கைது செய்தனர். தினேஷ் குஜ்ஜார், ரமேஷ் பஞ்சாரா என்ற இரு கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். கடந்த 14ம் தேதி கவிதா என்ற பெண்ணிடம் மாதவரம் பகுதியில் 8 சவரன் செயின் பறித்துள்ளனர். வழக்கில் மகேந்திரகுமார் என்ற கொள்ளையன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டனர்.