முன்கூட்டியே புறப்பட்ட விமானம்: பயணிகள் தவிப்பு

திருச்சி: திருச்சி-சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் முன்கூட்டியே புறப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட இருந்த விமானம் மதியம் 3 மணிக்கே சிங்கப்பூர் புறப்பட்டது. திருச்சியில் இருந்து முன்கூட்டியே விமானம் புறப்பட்டதால் சுமார் 20 பயணிகள் சிங்கப்பூர் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால் மாற்று விமானம் ஏற்பாடு செய்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

200 மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த ரூ.12.90 லட்சம் ஒதுக்கீடு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு