இந்த சம்பவத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாட் கனெக்ட் அறக்கட்டளை இயக்குநர் பி.என்.குமார் விடுத்துள்ள அறிக்கையில், ‘இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் உரிய விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்துகிறோம். பறவை தாக்கி விமான பயணி யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அது உலக அளவில் தலைப்பு செய்தியாகி இருக்கும்.
ஆனால் 40 பிளமிங்கோ பறவைகளின் இறப்பு நகர்ப்புற திட்டமிடும் அதிகாரிகளிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை’ என குறிப்பிட்டுள்ளார். இந்த பறவைகள் மும்பையிலிருந்து குஜராத்துக்கு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்கின்றனர் பறவை ஆர்வலர்கள். மேலும், மும்பையின் சதுப்பு நிலங்களை அழித்து நகர விரிவாக்க திட்டங்கள் செயல்படுத்துவதால் இதுபோன்ற விபத்துகள் நடக்கவிருக்கும் பேரழிவை சுட்டிக்காட்டுவதாக கூறி உள்ளனர்.