அப்போது, இரும்பு கொடி கம்பத்தை அகற்றும் பொழுது மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்ததில் மோகன் தூக்கி வீசப்பட்டு மயங்கினார். இதனை அடுத்து உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.