அத்துடன் இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் சாலைகள், குடியிருப்பு மற்றும் பூங்காக்களில் கொசுக்களை அழிக்கும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, வலிப்பு, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் EEE வைரஸ் தொற்று சோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. EEE வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 30% பேர் உயிரிழப்பதாக தரவுகள் தெரிவிப்பதால் மசாசூசெட்ஸ் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.