ஏரியில் மீன்பிடித்தபோது சேற்றில் மூழ்கிய மகனை மீட்ட தந்தை சேற்றில் சிக்கி உயிரிழப்பு

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் எலிக்கான் தெருவை சேர்ந்தவர் இளையராஜா (35). இவர் கூலி ெதாழிலாளி. இவரது மனைவி கீதாஞ்சலி (27). இவர்களுக்கு சாய் கிருஷ்ணன் (12) என்ற மகன் உள்ளார். நேற்று மாலை 4 மணி அளவில், இளையராஜா, சாய் கிருஷ்ணன் ஆகியோர் ஓட்டேரி ஸ்டீபன்சன் ரோடு கோவிந்தன் தெரு மேட்டுப்பாளையம் சந்திப்பு பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடித்துள்ளனர். அப்போது சாய் கிருஷ்ணன் திடீரென சேற்றில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளையராஜா மகனை மீட்க சேற்றி இறங்கி மகனை மீட்டு கரைக்கு அனுப்பிவிட்டு அவர் வெளியே வர முயற்சித்தபோது சேற்றில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்துள்ளார். இதை பார்த்த மகன் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார்.

இருப்பினும் ஆட்கள் யாரும் வராததால் கதறியபடி ஓடிச்சென்று அங்கு சென்றவர்களிடம் தெரிவித்து உதவி கேட்டுள்ளார். இதையடுத்து சிலர் ஓடிவந்து மீட்க முயற்சி செய்துள்ளனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஓட்டேரி போலீசார் வந்து பார்த்தபோது இளையராஜாவை காணவில்லை என்றதும் அவரை தேட ஆரம்பித்தனர். தீயணைப்பு வீரர்களும் வந்து ஏரியில் தேடியபோது சேற்றில் சிக்கியிருந்த இளையராஜாவின் உடல் கிடந்தது. இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேற்றில் சிக்கிய மகனை பத்திரமாக மீட்டுவிட்டு தந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

கலெக்டரிடம் மனு அளிக்க சென்ற சாம்சங் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது

பெரும்பாக்கம் அரசு கலை கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை

வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்