தயவு செய்து இரவுநேர பயணங்களை தவிர்க்க வேண்டும்’’ என்றார். பின்னர் நிருபர்களிடம் துரை வைகோ கூறியதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு பாடத்திட்டத்தை குறை கூறியுள்ளார். அவர் ஆர்எஸ்எஸ், பாஜ, பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகளின் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு கல்விமுறையை குற்றம் சுமத்தி வருகிறார். தமிழ்நாடு கல்விமுறை சர்வதேச அளவில் சிறந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள், உலகப்புகழ் பெற்ற மருத்துவர்கள் அனைவரும் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் தான்.
அவர் வேண்டுமென்றே தமிழ்நாடு கல்விமுறையை குற்றம்சாட்டுவதை தொடர்கிறார். தமிழக மீனவர் பிரச்னைக்கான தீர்வு ஒன்றிய அரசிடம் தான் உள்ளது. முதல்வர் கடிதம் எழுத முடியும். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் தான் உள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சரிடம் நான் பேசி இருக்கிறேன். ஒன்றிய அரசு இப்பிரச்னையில் இலங்கை அரசை பணிய வைக்கவேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.