சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டை சேர்ந்த 32 மீனவர்களை மார்ச் 21ல் கைது செய்தது இலங்கை கடற்படை. மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.