சென்னை: இலங்கை கைது செய்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 27 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.