தமிழ்நாட்டில் கடலோரத்தில் உள்ள 14 மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மிக கனமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதித்துள்ளனர். 13, 14ம் தேதிகளில் தமிழ்நாடு கடலோரம், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரத்தில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.