சென்னை: ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் நவ.26க்குள் கரை திரும்ப வானிலை மைய தென் மண்டல தலைவர் அறிவுறுத்தியுள்ளார். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர்.26ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.