சென்னை: இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கை வசம் உள்ள 47 மீனவர்களையும் 166 மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும். 2024-ல் மட்டும் இலங்கை கடற்படையால் இதுவரை 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 27 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது மீனவ சமுதாயத்தினர் இடையே பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளது என்று கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.