சென்னை: தமிழ்நாடு மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். அரிவாள், கத்தியால் வெட்டிவிட்டு இரும்புக்கம்பி, உருட்டுக்கட்டையால் தாக்கியதில் 11 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.