மின்னல் தாக்கி மீனவர் பலி

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டையை சேர்ந்தவர் கண்ணபிரான் (32). மீனவரான இவர், நேற்றுமுன்தினம் மதியம் தனது அண்ணன் அருண் (38) மற்றும் 3 பேருடன் பைபர் படகில் தரங்கம்பாடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்றார். நேற்று அதிகாலை 5 மணியளவில் மீன்களுடன் துறைமுகம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் 4 பேர் கரை திரும்பினர். அருண் மட்டும் படகில் இருந்தபோது, மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி பலியானார். இதேபோல் மற்றொரு படகில் வந்த குட்டியாண்டியூரை சேர்ந்த ராஜேந்திரன் (46) மின்னல் தாக்கி காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்