மீனவர்களை பற்றி கவலையில்லை பார்க்காத நாடுகளை பார்க்க உக்ரைன் சென்றுள்ளார் மோடி: சீமான் அட்டாக்

திருத்துறைப்பூண்டி:நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வழக்கமான ஒன்று. எல்லையில் இந்திய கடற்படை கப்பலை நிறுத்தினால் இதுபோன்ற பிரச்னைக்கு இடமில்லை.

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு பயிற்சி போன்றவைகளை இந்தியா வழங்கி வருவது ஏற்புடையதல்ல. ஒன்றிய அரசு தமிழக மீனவர்கள் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் அவர்கள் வாக்குகளை மட்டும் வேண்டும் என்கின்றனர். பிரதமர் மோடி பார்க்காத நாடுகளை பார்ப்பதற்காக, உக்ரைன் சென்றுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது