சென்னை: மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 25 மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மைக் காலமாக தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை படை கைது செய்வது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஜூலை 1-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.