மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 25 மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மைக் காலமாக தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை படை கைது செய்வது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஜூலை 1-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

சென்னைக்கு சப்ளை செய்ய வனப்பகுதியில் வெட்டி கடத்திய ரூ.1.60 கோடி செம்மரம் பறிமுதல்: 4 பேர் கைது

தஞ்சை அருகே ஏரியில் பயிற்சி விமானம் விழுந்ததா? வதந்தி பரப்பியவருக்கு போலீஸ் வலை

அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் கொண்டாட ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு விளக்கம்