சென்னை: இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். எல்லை தாண்டியதாக கூறி மாவட்ட மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது. ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.