புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரையிலான ஒன்றிய அரசின் நிதிப்பற்றாக்குறை விவரங்களை சிஜிஏ நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையாக ரூ.17.86 லட்சம் கோடியாக, அதாவது ஜிடிபியில் 5.9 சதவீதம் இருக்கும் என ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.
இதில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் நிதிப்பற்றாக்குறை ரூ.8.03 லட்சம் கோடியாக உள்ளது. இது அரசு நிர்ணயித்திருந்த இலக்கில் 45 சதவீதமாகும். முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் நிதிப்பற்றாக்குறை 45.6 சதவீதமாக இருந்தது. மேற்கண்ட 7 மாதங்களில் ஒன்றிய அரசுக்கு ரூ.15.9 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுபோல் மேற்கண்ட காலக்கட்டத்தில் ஒன்றிய அரசின் மொத்த செலவு ரூ. 23,94 லட்சம் கோடி.