சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு உரையாற்ற உள்ளார். ஆளுநர் உரைக்கு பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்களுக்கு அவையை நடத்தலாம் என முடிவுசெய்யும். ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை 3 நாட்கள் வரை நடத்த திட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.