திருவாரூர்: சாராய வியாபாரியை ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் திருக்களார் போலீஸ் ஏட்டு கலையரசன் (37), போலீஸ்காரர் விஷ்ணு (32) ஆகியோர் கடந்த மாதம் 24ம் தேதி அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாட்டார் பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி ராஜதுரை, டூவீலரில் புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுப்பினர்.
மறுநாள் அதே காவல் நிலைய மாற்று போலீசாரின் வாகன சோதனையில் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்த ராஜதுரை சிக்கினார். முதல்நாள் தான் ரூ.10ஆயிரம் 2 போலீசாரிடம் லஞ்சம் கொடுத்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும் அவரை கைது செய்த போலீசார் இதுபற்றி மேல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து சாராய வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய ஏட்டு கலையரசன், காவலர் விஷ்ணு ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.