இதற்காக ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் பெறப்பட்ட கடன் ரூ.100 கோடி உள்ளதால் நூலகங்களுக்கான கட்டுமானப் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒன்றிய அரசு கடனுதவி இந்த ஆண்டு ரூ.200 கோடி அறிவித்து முதல்கட்டமாக ரூ.100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதில் பொது நூலகத் துறை பங்களிப்பு 30 சதவீதம் சேர்த்து ரூ.130 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்படவுள்ளன. நூலகங்களில் 500 சதுர அடி அளவில் கட்டிடம் அமையும். அடுத்த சில மாதங்களில் மேலும் ரூ.100 கோடி விடுவிக்கப்பட்டவுடன் மொத்தம் ரூ.260 கோடி மதிப்பில் 828 நூலகங்களின் கட்டுமானப்பணி நிறைவு செய்யப்படும். நூலக வரி வசூல் மூலம் ஒன்றிய அரசு கடனை வட்டியின்றி திருப்பிச் செலுத்தி ஈடு செய்யப்படும் என்றனர்.