இந்த பேருரை நிகழ்த்தியதை தொடர்ந்து, அவருக்கு நார்மன் காலோவே விருது வழங்கப்பட்டது. இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதுதொடர்பாக அமர் அகர்வால் கூறியதாவது: நார்மன் காலோவே புகழ்பெற்ற ஒரு பிரிட்டிஷ் கண் மருத்துவவியல் நிபுணர், கண் மருத்துவவியல் செயல்முறையில் மிகப்பெரிய மாற்றங்களை செயல்படுத்துவதற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியவர் என போற்றப்படுகிறார்.
அவரது பெயரில் நிறுவப்பட்ட இந்த பேருரையை வழங்குவதற்கு வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருப்பதை ஒரு சிறந்த கவுரவமாக கருதுகிறேன். அவரது பெயரில் வழங்கப்படும் விருதை பெறுவதும் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மிகப்பெரிய அங்கீகாரங்களை பெருகின்ற முதல் இந்தியர் என்ற கவுரவத்தை பெறுவது இன்னும் அதிக பெருமை தருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.