முதல் இரட்டையர்கள்

கோலாலம்பூரில் நடைபெறும் மலேசியா ஓபன் பேட்மின்டன் ேபாட்டியில் நேற்று 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதன் மகளிர், ஆடவர் ஒற்றையர் பிரிவுகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தனர். அதே நேரத்தில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்/சிராக் இணை 39நிமிடங்களில் பிரான்சின் லூகாஸ் கார்வீ, ரோனன் லாபர் இணையை 21-11, 21-18 நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப் பெற்றனர்.

இந்த வெற்றி மூலம் சர்வதேச பேட்மின்டன் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய இரட்டையர்களாக சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோர் சாதித்தனர். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ இணையும் 21-19, 13-21, 21-15 என்ற செட்களில் ஜப்பானின் மாயூ மட்சுமோடோ, வாக்னா நகஹரா இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Related posts

சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்