பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; வாலிபர் பலி

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த கதிரேசன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பகல் ஒரு மணியளவில் ஒரு அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த சிவகாசி அருகே அருணாசலபுரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(23) என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

மணிப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.. முகாமில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்தார்..!!

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.22 கோடி மதிப்புடைய 6 சாமி சிலைகளை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை