ஓசூர், நவ.4: ஓசூரில் தீயணைப்பு துறை சார்பில், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓசூர் தாலுகா அலுவலகத்தில், தீயணைப்பு துறை சார்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்து குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி அளிப்பது, மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நீர் நிலைகளில் பாதுகாப்பாக இருப்பது, நீர்நிலைகளில் மூழ்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தாசில்தார் சுப்பிரமணி, நிலைய அலுவலர் நாகவிஜயன் தலைமையில், சிறப்பு நிலைய அலுவலர் ராஜா உள்ளிட்ட தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.