விருதுநகர்: பட்டாசு ஆலைகள் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். பட்டாசு ஆலைகள் மற்றும் விற்பனைக் கடைகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.