சென்னை: சென்னை வேளச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள 9 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்து ஏற்பட்ட இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் செல்லாததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக காணப்படுகிறது. கட்டடத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.