சோழவரத்தில் தீ விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

புழல்: சோழவரம் அடுத்த ஒரக்காடு கிராமத்தில் தனியார் பால் நிறுவனம் உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டால் அதைக் தடுப்பது எப்படி என்பது குறித்து செங்குன்றம் தீயணைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் பால் நிறுவன வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. செங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் இதற்கு தலைமை தாங்கினார். இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு விபத்து மற்றும் தீ விபத்து நடைபெற்றால் அதிலிருந்து எப்படி விடுபடுவது, விபத்துக்களை எப்படி தடுப்பது போன்ற விழிப்புணர்வை செயல் முறையில் செய்து காட்டினார்கள்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா