கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைத்தவர் கைது

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 6 ஆம் தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பெட்ரோல் ஊற்றி எரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தீ வைப்பு சம்பந்தமாக கோயில் கண்காணிப்பாளர் பாலமுருகன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தீ வைப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தீ வைத்த தீனதயாளன் என்பவரை சென்னை பாரிமுனையில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைதானவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு