பின்னர், கட்சி அலுவலகத்துக்கும் அது பரவத் தொடங்கியது.இது தொடர்பாக, மாலை 4.31 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். அரை மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டு விட்டது. ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனத்தை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைத்திருந்தனர். அதில் இருந்த தண்ணீரை பயன்படுத்தி, ஜெனரேட்டரில் ஏற்பட்ட தீயை போலீசார் அணைத்தனர்.