பொது இடங்களில் குப்பை கொட்டினால் விதிக்கப்படும் அபராத தொகையை உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை : சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் விதிக்கப்படும் அபராத தொகையை உயர்த்த மாமன்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் 6.59 ஏக்கரில் சாலையோர பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

குப்பை, கட்டடக் கழிவுகளை கொட்டும் நடவடிக்கைக்கு அபராதத்தை உயர்த்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வியாபாரிகள் குப்பைத் தொட்டியை வைக்காமல் இருந்தால் அபராதம் ரூ.100ல் இருந்து ரூ. 1000 ஆக உயருகிறது. பொது இடங்களில் திடக்கழிவுகளை எரிப்பதற்கான அபராதம் ரூ. 1,000 லிருந்து ரூ.5,000ஆக உயர்கிறது.

சென்னை மாநகராட்சியின் பொது இடத்தில் குப்பை கொட்டினால் விதிக்கப்படும் அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்த மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பொது இடத்தில் திடக்கழிவை எரித்தால் விதிக்கப்படும் அபராதத்தை ரூ.1000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கட்டடக் கழிவுகளை ஒரு டன் வரை கொட்டினால் அபராதத்தை ரூ,2.000 லிருந்து ரூ.5.000 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.

சென்னையில் பொது இடத்தில் மரக்கழிவு கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ.200 லிருந்து ரூ.2000 ஆகவும், வியாபாரிகள் குப்பை தொட்டி வைக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதம் ரூ.100 லிருந்து 1000 ஆகவும், மெரினா, அண்ணாநகரில் பொது இடத்தில் நிகழ்ச்சி நடத்திவிட்டு தூய்மைப்படுத்தாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும்: சாம்சங் நிறுவனம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் அனைவரும் தேவஸ்தான விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்: சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்