இயற்கை பேரிடராக பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.10 கோடி நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இயற்கை பேரிடராக பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில்: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் காரணமாக அம்மாநில மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஏற்பட்ட கடும் சேதங்கள் என்னை மிகுந்த வருத்தத்திற்கும், வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது.

மிகவும் நெருக்கடியான இந்த சூழ்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை திறமையாக மேற்கொண்டு வருவதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போதைய நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக இமாச்சல பிரதேச அரசுக்கு ரூ.10 கோடியை வழங்குகிறேன்.

மேலும், இமாச்சலப் பிரதேசத்திற்கு உதவுவதற்காக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் எப்போதும் தயாராக இருக்கிறோம். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம். இவ்வாறு அவர் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, நேற்று காலை இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் வாயிலாக தொடர்பு கொண்டு பேரிடரால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மீட்பு பணிகள் குறித்த விவரங்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு சீல் வைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ

போக்குவரத்து பணிமனை உணவகங்களில் தரமான உணவு வழங்க தொழிலாளர்கள் வலியுறுத்தல் : பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை!!