டெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். “தேர்தல் பத்திர விவகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்” என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திர விவகாரத்தில் மிரட்டி பணம் பறித்ததாக நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.