பேரிடர் அபாய தணிப்பு பணி குழுவின் ஜி-20 இறுதி கூட்டம் இன்று நடக்கிறது

சென்னை: பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் மூன்றாவது மற்றும் இறுதி ஜி20 கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தியா நடத்தும் ஜி-20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் மூன்றாவது மற்றும் இறுதிக் கூட்டம் இன்று முதல் வரும் 26ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் ஜி 20 நாடுகள் மற்றும் அவற்றின் தலைமை, சர்வதேச அமைப்புகள் மற்றும் அறிவுசார் கூட்டாளர்களை ஒன்றிணைத்து, பணிக்குழுவின் முன்னுரிமை பகுதிகள் தொடர்பான பகிரப்பட்ட கடமைகள் மற்றும் முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை உருவாக்குவதில் ஈடுபடும்.

பிரதமரின் முதன்மைச் செயலாளர் மிஸ்ரா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த கூட்டமானது நடைபெறவுள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி மாமி மிசுடோரி, இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் தணிப்பு முகமையின் அமைப்புகள் மற்றும் உத்திகளுக்கான துணைத் தலைவர் ராதித்யா ஜாதி, புதுடெல்லியில் உள்ள பிரேசில் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் பெட்ரோ பியாசி டி சோசா, ஜி 20 ஷெர்பா தூதர் அமிதாப் காந்த் ஆகியோரின் பங்கேற்கின்றனர். பேரழிவுகளால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க ஜி 20 நாடுகளின் ஒத்துழைப்பில் பேரழிவு அபாயத் தணிப்பை பிரதானப்படுத்த வேண்டும்.

மேலும், தொழில்நுட்ப அமர்வுகளுக்கு இடையே, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்ஐடிஎம்), பேரிடர் மீள்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணி (சிடிஆர்ஐ) மற்றும் ஐ.நா. பெண்கள் போன்ற அறிவுசார் முகவர்களால் பக்க நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். உள்கட்டமைப்பு இடைவெளியை நிரப்புவதற்கும், பேரழிவைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்பு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், பெண்கள் தலைமையிலான மற்றும் சமூக அடிப்படையிலான பேரழிவு அபாயத் தணிப்பை மேம்படுத்துவதற்கும் மீள்திறன் ஈவுத்தொகையைப் பெறுவதில் பக்க நிகழ்வுகள் கவனம் செலுத்தும்.

அதேபோல, ஜி 20 பிரதிநிதிகள் மகாபலிபுரத்தில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச்சின்னங்களைப் பார்வையிடவும், பிராந்தியத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், அதே நேரத்தில் பேரழிவுகளின் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கும். பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் (டி.ஆர்.ஆர்.டபிள்யூ.ஜி) மூன்றாவது மற்றும் இறுதி ஜி 20 கூட்டம் சென்னையில் ஒரு மைல்கல் நிகழ்வாக இருக்கும் என கருதப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகள் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் நெகிழ்வான எதிர்காலத்தை உருவாக்க கூட்டு அனுபவங்களை இக்கூட்டத்தின் மூலமாக பகிர்ந்து கொள்கின்றனர்.

Related posts

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை திருவல்லிக்கேணியில் பைக் ரேஸ் ஒட்டியதில் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து: 8 பேர் கைது..!!

என்சிஇஆர்டி அலட்சியம்; 6ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு