நியூயார்க்:பிரபல சினிமா தயாரிப்பாளர் மீது அமெரிக்க பாடகி பவுலா அப்துல் பாலியல் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘ஐடல்’ நிறுவன சினிமா தயாரிப்பாளர் நைகல் லித்கோ என்பவர் மீது, பிரபல அமெரிக்க பாடகி பவுலா அப்துல் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரில், ‘அமெரிக்க ஐடல் நிர்வாக இயக்குனர் நைகல், என்னுடன் லிப்டில் சென்ற போது பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார். ஆனால் அவரிடம் இருந்து எப்படியோ தப்பித்து விட்டேன். அப்போது அவர் என்னை சுவரில் தள்ளிவிட்டு, எனது அந்தரங்க உறுப்புகளை தொட்டார்.
தற்காப்புக்காக நைகலைத் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் என்னை தனது வீட்டிற்கு இரவு உணவிற்கு அழைத்தார். எனது தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அவரை பற்றி பல ஆண்டுகளாக தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டேன். அதனால் அன்று நடந்ததை பொதுவெளியில் தெரிவிக்கிறேன். இவ்விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளேன்’ என்று கூறினார். இருப்பினும், இவ்விவகாரம் குறித்து நைகல் லித்கோ தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.