அதேபோல், 38 பேர் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு தாக்கல் செய்தனர். மேலும், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்பி போட்டியிட வேண்டும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்பட திமுக நிர்வாகிகள் 12 விருப்ப மனுக்களை நேற்று வழங்கினர்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுக்கள் வழங்கப் பட்டுள்ளது. மேலும், திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதியில் அருண் நேரு போட்டியிட வேண்டும் என்று 30க்கும் அதிகமான விருப்ப மனுக்களை வழங்கினர். இவர்கள் உள்பட 100க்கும் அதிகமானோர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்களை நேற்று வழங்கினர்.